📚 பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்றது 17-06-2026 அன்று கற்பிட்டி மண்டலக்குடா பாடசாலையில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கற்பிட்டி பிரதேச செயலகத்தின் உளவளத்துணையாளர் H.M. நிப்ராஸ் அவர்கள் வளவாளராக கலந்து கொண்டு, குழந்தைகளின் கல்வி முன்னேற்றம், நல்லொழுக்க வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் பெற்றோரின் பொறுப்புகள் தொடர்பாக பயனுள்ள கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். பாடசாலை மாணவர்களின் கல்வி மற்றும் ஆளுமை மேம்பாட்டில் பெற்றோரின் பங்களிப்பை வலுப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் பெற்றோர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பயனடைந்தனர். #ParentAwareness #Kalpitiya #Education #SchoolProgram #HMNipras #MandalakudaSchool 18-06-2026 செய்தித்தொகுப்பு:-தாஜூதீன் முஹம்மட் ஆசிக்
ஆப்கானிஸ்தான் அணிக்கு 403 வெற்றி இலக்கு,தொடரை கைப்பற்றிய இந்திய அணி இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகின்றது. இதில் முதலாவது போட்டியானது மழை காரணமாக 25 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டது இதில் இந்திய அணி வெற்றிபெற்றது இரண்டாவது போட்டியானது இந்தியா லக்னோவில் பகல் இரவுப்போட்டியாக இன்று ஆரம்பமானது நாணய சுழற்ச்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீசத்தீர்மானித்தது இந்தியா அணி சார்பாக ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ரோஹித் சர்மா களம் இறங்கினார்கள்,ஆரம்பம் இந்திய அணிக்கு சரியாக அமையவில்லை என்றுதான் கூறவேண்டும் இந்திய அணியின் முதலாவது விக்கெட் 9ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது ஜெய்ஸ்வால் 4ஓட்டங்கள் பெற்றிருந்தபோது ஆட்டம் இழந்தார், அதன் பின் அணித்தலைவர் சுப்மன் கில் துடுப்பெடுத்தாட வர ஆப்கான் அணி எதிர்பார்க்காத ஒரு இலக்கை தீர்மாணித்தது இந்திய அணி என்றுதான் கூறவேண்டும் ,இந்திய அணி 403ஓட்டங்களை ஆப்கான் அணிக்காக நிர்ணயித்தது இந்திய அணி சார்பாக துடுப்பெடுத்தாட்டத்தில் சுப்மன் கில்-...